திருமழப்பாடி பேராசிரியர் அ. ஆறுமுகனார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு
அ. ஆறுமுகனார் அவர்கள் (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று பிற்பகல் (31.12.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.  இவர் தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்றவர் ஆவார். திருமழப்பாடியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படக் காரணமாக இருந்தவர்.

இவருக்கு மகன் திருவள்ளுவன் (சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர், ஓய்வு) உட்பட அய்ந்து மகன்களும், அல்லி என்ற மகளும் (ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்) உள்ளனர்.

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி செயங்கொண்டத்திற்கு நான் சென்றிருந்தபோது ஆறுமுகனாரின் வாழ்விணையர் சாரதம்மாள், மகள் அல்லி ஆகியோர் என்னைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு நிதியும் அளித்தனர். பேராசிரியர் ஆறுமுகனார் மறைவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தமிழ் அன்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

1.1.2026 

குறிப்பு:  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுமுகனார் மகள் அல்லியிடம் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

தொடர்புக்கு: 9843626058

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *