பெரியார் பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், ஜன.1– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவக் குழு கலந்து கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இக்கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை, இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவர் வி.ஆர்.விக்னேஷ் தனது மருத்துவமனை குழுவுடன் இப்பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்து மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை (Blood Test), எலும்பு பரிசோதனை (Screening for Bone),  முதுகெலும்பு (Spine)  மற்றும் இணைப்பு மூட்டுக்கள் சோதனை (Joints)  ஆகிய மருத்தவ பரிசோதனைகள் முடிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நோவா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் வி.ஆர்.விக்னேஷ் பணியாளர்களுக்கிடையே எலும்பியல் மற்றும் முடநீக்கியல் சம்மந்தமான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளையும் மிகவும் எளிமையாக விளக்கினார். இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பணியாளர்கள் பலர் பயனுள்ள மருத்துவம் சார்ந்த கேள்விகள் மூலம் மருத்துவரிடம் விளக்கம் பெற்று பயன் அடைந்தனர்.  இம்மருத்துவ முகாமில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 75 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறுதியாக மருத்துவர் குழுவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா கல்லூரியின் சார்பில் நன்றியை தெரிவித்தார். இம்மருத்துவ முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜீ.செங்கொடி, ஆர்.நடராஜன் மற்றும் பி.மாதவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *