வாக்குச்சாவடி முகவர்கள் தினமும் 10 எஸ்.அய்.ஆர். படிவங்களைப் பெறலாம் தேர்தல் ஆணையம் அனுமதி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.31 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் தங்கள் எஸ்.அய்.ஆர். (SIR – Statement of Information Record) கணக்கீட்டு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் (Booth Level Agents – BLA) வழங்கலாம்.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர்களிட மிருந்து நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 படிவங்களை மட்டுமே பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முகவர்கள் தாங்கள் பெற்ற படிவங்களை அந்தந்த பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (Booth Level Officers – BLO) முறையாக ஒப்படைக்க வேண்டும்.

படிவங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகே முகவர்கள் அவற்றை வாங்க வேண்டும். மேலும், “படிவங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப் பட்டது” என்ற உறுதிமொழியை முகவர்கள் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விரைவுபடுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *