டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உத்தரகாண்டில் கொலை செய்யப்பட்ட திரிபுரா மாணவன் அஞ்சல் சாக்மா தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
* மாணவன் கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நான் என் நண்பர்களை மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டுமா?’: பரேலி கபேயில் சங்கி குண்டர்கள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சீர்குலைத்த பிறகு பிறந்த நாள் கொண்டாட அழைப்பு விடுத்த பெண் செவிலியர் கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எஸ்அய்ஆர் ஒரு ‘பெரும் ஊழல்’, இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால் டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சபதம்.
* திராவிட இயக்கம் பெண்களின் அடிமைத்தன விலங்குகளை உடைத்தது, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ பெண்கள் இருப்பதை பாஜக விரும்பவில்லை; திமுக 2.0 ஆட்சி பெண்களுக்கானதாக இருக்கும்: திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி இந்து:
* மெட்ராஸ் பல்கலைக்கழக மசோதா குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்: மாற்று வழிகள் இருப்பதாகவும், இறுதி முடிவு விரைவில் முதலமைச்சரால் எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
* வளர்ச்சி, தனிநபர் வருமானம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் போது, மாநிலத்தின் கடன் ஏன் அவ்வளவு ‘ஆபத்தானதாக’ தெரியவில்லை? மேலும், வருவாயில் 75% மாநிலத்தின் சொந்த வளங்களிலிருந்து வரும்போது, நிலுவையில் உள்ள கடன் குறித்த விவாதங்களில் வரி வசூலிக்கும் திறன் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி முறை எவ்வாறு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்? விளக்குகிறது சல்மான் சோஷ் கட்டுரை.
* ‘திருத்தணி தாக்குதலுக்கு வட இந்திய அடையாளம் காரணம் அல்ல’ வட மண்டல காவல்துறைத் தலைவர் ஆஸ்ரா கார்க் பேட்டி.
தி டெலிகிராப்:
* குருகிராமில் கட்டுமானத்தில் உள்ள தேவாலய இடம் பஜ்ரங் தள், வி.ஹெச்.பி. குண்டர்களால் ‘நாசப்படுத்தப்பட்டது’, காவல்துறை பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்திஉள்ளது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் விரிசல்: ‘நம்பிக்கைத் துரோகம்’: பிஎம்சி தேர்தலுக்கான மகா அஜூதி தொகுதிப் பங்கீட்டில் இருந்து ஆபிஅய்(ஏ) விலக்கப்பட்டதற்கு ராம் தாஸ் அதாவாலே கருத்து; 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு. பொங்குகிறார் ஆர்.பி.அய்.(ஏ) கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதாவாலே.
– குடந்தை கருணா
