பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு டில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஏப். 27- மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச் சாட்டுகள் தீவிரமானது என தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி டில்லி காவல்துறைக்கு தாக்கீது அனுப்பியது.

இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. 

இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை கள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசா ரணை ஆணையம் அமைத்தது. மேரி கோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கை யையும் தாக்கல் செய்து விட்டது. 

எனினும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டில்லியில் போராட் டத்தில் குதித்தனர்.

பாலியல் தொல்லை குறித்த தங்களின் புதிய புகார் மீது முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய் யாததை கண்டித்தும், ஏற்கெனவே நடந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விவரத்தை கோரியும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பாலியல் குற்றச் சாட்டு புகார் தொடர்பாக மல் யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பன்னாட்டு அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங் கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. அந்த மனு மீது டில்லி காவல்துறை பதில் அளிக்க தாக்கீது அனுப்பவும், வழக்கை இன்று (27.4.2023) பட்டி யலிடும்படியும் உத்தர விட்டனர்.

 மேலும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாதவகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்க ளின் பெயர்களை நீக்கவும் உத்தர விட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *