இயற்கை சீற்றங்களால் 10 லட்சம் கோடி இழப்பு கிறிஸ்டியன் எய்ட் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இயற்கைச் சீற்றங்களால் 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகிற்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய 10 தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகிற்கு 122 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்ட் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில் இது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஆகும்.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெய்த கடும் பருவமழை மிக முக்கியமான பாதிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடித்த இந்த மழையினால் இரு நாடுகளிலும் சேர்ந்து சுமார் 1,860 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5.6 பில்லியன் டாலர் அதாவது சுமார் 41,500 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயால் 60 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. இழப்பின் அளவில் இதுவே முதலிடத்தில் உள்ளது. இதில் 400 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
புவி வெப்பமடைதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே இத்தகைய பேரிடர் களுக்குக் காரணம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பணக்கார நாடுகளை விட வளரும் நாடுகளே உயிரிழப்பு ரீதியாக அதிக பாதிப்பு களைச் சந்திப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *