தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் 13 லட்சம் பேர் பயன்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.29– தமிழ்நாடு முழுவதும் 21 வாரங்களாக நடைபெற்ற 844 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மருத்துவ முகாம்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் நடந்து வந்த முகாம், தற்போது வியாழக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று வருகிறது.

வழங்கப்படும் மருத்துவச் சேவைகள்: இந்த முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதயம், நுரையீரல், எலும்பியல், நரம்பியல், தோல், காது-மூக்கு-தொண்டை (ENT), மகப்பேறு, இயன்முறை மருத்துவம் (Physiotherapy), பல், கண், மனநலம் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகளைச் சார்ந்த சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், யுனானி, சித்தா) சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் சேவைகள்: மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளும் இந்த முகாம்களில் மேற்கொள்ளப் படுகின்றன.

தற்போதைய நிலை: 21ஆவது வாரமாக நேற்று முன்தினம் 44 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 65,147 பேர் பயனடைந்தனர். இதன் மூலம், இதுவரை நடந்து முடிந்துள்ள 844 முகாம்கள் வழியாக மொத்தம் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *