தந்தை பெரியார் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மருத்துவ முகாம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குடியேற்றம், டிச. 29– பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-ஆவது நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் நுரையீரல் பரி சோதனை முகாம் 28.12.2025 இன்று காலை 9 மணி முதல் 1.30 மணி வரை குடியேற்றம் புவனே சுவரிப்பேட்டை பெரியார் அரங்கில், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை யில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பி. தனபால் அனைவரையும் வரவேற்றார், வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி இந்நிகழ்வில் இணைப்புரை வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் நோக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், பகுத்தறிவாளர் கழகம் தோழர்கள் ஜெ.தமிழ்ச் செல்வன, வெ.ரா.நபீஸ்அகமது, கே.எஸ்.அஸ்ரப் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள்.

மருத்துவ முகா மில் இருதயம், நுரை யீரல், தைராய்டு, நரம்பியல், எலும்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்து வர் சி.பாலச்சந்தர், மருத்துவர் நவீன் ஆகியோர் முகாமில் கலந்துக் கொண்ட பொதுமக்களுக்கு உரிய பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் கலந்துக் கொண்டு நுரையீரல், இருதயம், நீரிழிவு, கொழுப்பு அளவு, ரத்தக்கொதிப்பு மற்றும் எலும்பு பரிசோதனை செய்துக் கொண்டு உரிய சிகிச்சை பெற்றனர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம், நகர கழக தலைவர் சி.சாந்தகுமார், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பெ.இந்திராகாந்தி, மாணவர் கழகம் அ.அஜித் மற்றும் வே.வி.யோகசரண் ஆகியோர் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர். மருத்துவ முகாம் முடிவில் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் வாஜிவானந்தம் நன்றி உரையாற்றினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *