நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! மிகச் சிறப்பாக நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், டிச.29 நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ம் நிதி வழங்கும் விழாவினை நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட  கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (28.12.2025) நாகர்கோவில், ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடை பெற்றது.  கழக மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார்.  கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

கழகக் காப்பாளர் ம.தயாளன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர்.

மாவட்ட துணைச் செயலா ளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக்நியூட்டன்,   குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு, தோழர்கள் மு.பால்மணி, பிரகாஷ், பெருமாள் மற்றும் பலரும் பங்கேற்றனர். அகவை 93 காணும் தமிழர்தலைவர் ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கள் தெரிவிப்பது, ஜனவரி 22 இல் நாகர்கோவில் மாநகரில்,இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக – இதுதான் திராவிடம், திராவிட மாடல், பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா அரங்கக் கூட்டத்தினை எழுச்சிகரமாக நடத்துவது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு, மாவட்ட கழகம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்குவது, சென்னையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழுமனதாக வரவேற்று குமரிமாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கழக மாவட்ட இளைஞரணி தலைவர்
இரா.இராஜேஷ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *