பிஜேபியிடம் பணிந்த அ.தி.மு.க.

2 Min Read

அரசியல்

சென்னை ஏப்.28 தேர்தல் பணி களைத் தொடங்க ஏதுவாக, பாஜகவுக்கான தொகுதிகளை விரைந்து முடிவு செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வலி யுறுத்தியதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

அதிமுக பொதுச் செயலாள ராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை நேற்று முன்தினம்  (26.4.2023) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாடு தலைவர் அண்ணா மலை உடனிருந்தனர். அதே போல,  பழனிசாமியுடன், அதிமுக மேனாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோரும் சென்றனர்.

மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள அதிமுக கூட்டணியை வலுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு, தேமுதிக, பாமக கட்சிகளின் தற்போதைய பலம், திமுக கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ளிட்டவை குறித்து பழனிசாமியிடம், அமித்ஷா கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட சில தொகுதிகளைத் தேர்வு செய்திருப்பதாகவும், அந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்தலாம் என்ற வரைவுத் திட்டத்தை தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தென்காசி, கோவை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், முன்கூட்டியே தொகுதி முடிவு செய்யப்பட்டால், பாஜகவினர் தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என்றும் அமித் ஷா கூறியதாகவும், கட்சித் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆட்சிமன்றக் குழுவுடன் கலந்து ஆலோசித்து, உரிய முடிவு தெரிவிப்பதாக பழனிசாமி கூறிய தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்ததை அறிந்திருக்கும் அமித்ஷா, இரு தரப்பினரும் மக்களவை தேர்தல் வெற்றி, பொது எதிரியை வீழ்த்துவதை நோக்கி பயணிக்க வேண்டும். கருத்து மோதல்கள் மற்றும் எதிர் விமர்சனங்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பழனி சாமியிடம் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. 

மேலும், அண்ணாமலை முக்கியமானவர் என்பதை அதிமுகவினருக்கு உணர்த்தும் வகையில், இந்த சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக அண்ணா மலையை பங்கேற்கச் செய்ததாக வும், அண்ணாமலையை அதிகம் விமர்சித்த மேனாள் அமைச்சர் ஜெயக்குமாரை, இந்த சந்திப் பின்போது அண்ணாமலைக்கு அருகில் அமரவைத்து ஜெயக்குமா ருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத் தியதாகவும் அதிமுக வட்டாரங் களில் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *