டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்களுக்கு சான்றிதழ் பதிவேற்ற இறுதி வாய்ப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.28 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத் தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் உள்ள தேர்வர்களுக்கு, மீண்டும் சான்றிதழ்களைப் பதிவேற்ற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாடு அலு வலர் சண்முக சுந்தரம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது: ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் சில தேர்வர்கள் பதிவேற்றம் செய்திருந்த சான்றிதழ்களில் குறைபாடுகள் இருப்பதும், சில முக்கியமான சான்றிதழ்கள் சரியாகப் பதிவேற்றம் செய்யப்படாததும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பு நேற்று (27.12.2025) தொடங்கியது. 5.1.2025 வரை பதிவேற்றம் செய்யலாம்.

சான்றிதழ் பதிவேற்றத்தில் குறைபாடுள்ள தேர்வர்களுக்கு மட்டுமே இது குறித்து தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல் (E-mail) மற்றும் குறிப்பாணை (Memo) மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் பெறப்பட்ட தேர்வர்கள் அனைவரும், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘ஒருமுறைப் பதிவு’ (OTR) தளம் வாயிலாக விடுபட்ட அல்லது சரியான சான்றிதழ்களை உடனடியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய சான்றிதழ் களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் தேர்வர்களின் விண்ணப்பங்கள் மற்றும் உரிமைகோரல்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி
இன மாணவர்களுக்கு சாக்கோ மூலம் இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி

சென்னை, டிச.28 தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், சாக்கோ அமைப்பின் மூலம் இணையவழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி  வழங்கப்பட உள்ளது.

தற்காலத்தில் மருத்துவத் துறை மிகவேகமாக வளர்ந்து வரும் சூழலில், மருத்துவமனைகளைத் திறம்பட நிர்வகிக்கும் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் பின்வரும் இலக்குகள் எட்டப்பட உள்ளன:

மாணவர்களுக்கு நவீன மருத்துவமனை நிர்வாக நுணுக்கங்களைக் கற்பித்தல்.     கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உயர்மட்டப் பணிகளில் அமர்வதற்கான தகுதியை உருவாக்குதல். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் இருப்பிடத்திற்கே கல்வியைக் கொண்டு சேர்த்தல் ஆகியனவற்றை இணையவழி கற்றல் (Online Training) மூலம் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே வசதியான நேரத்தில் பயிலலாம்.

நிபுணர்கள் மூலம் பயிற்சி: அனுபவம் வாய்ந்த மருத்துவமனை நிர்வாக நிபுணர்கள் மற்றும் பேரா சிரியர்கள் நேரலையில் வகுப்புகளை நடத்துவர்.

பாடத்திட்டம்: மருத்துவமனை மேலாண்மை, நோயாளிகள் பராமரிப்பு நிர்வாகம் (Patient Care), மருத்துவக் காப்பீடு மற்றும் மெடிக்கல் பில்லிங் போன்ற முக்கியப் பாடங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.     சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு: பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, முன்னணி மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பைப் பெறவும் வழிகாட்டப் படும்.    ஆதிதிராவிடர் (AD) மற்றும் பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்த மாணவராக இருத்தல் வேண்டும்.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் இது போன்ற தொழில்முறைப் படிப்புகளை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ பயில இந்தத் திட்டம் ஒரு பொற்கால வாய்ப்பாகும்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய, சாக்கோ (SACO) அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *