வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தீவிரம் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 அதிகாரிகள் வரை நியமனம் தேர்தல் ஆணையம் அதிரடி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 28– தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர் தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகத் துல்லியமாகவும் வேகமாக வும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை (Assistant Electoral Registration Officers – AERO) நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்த அளவிலேயே இருந்த அதிகாரிகளின் எண்ணிக்கை, தற்போது பணிகளின் சுமைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தபட்சமாக 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரிய தொகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் அதிக பட்சமாக 20 அதிகாரிகள் வரை நியமிக்கப் பட்டுள்ளனர்.

பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 15 அதிகாரிகள் வரை பணிகளைத் தீவிரப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

துரித நடவடிக்கை

வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி தீர்வு காண இந்த கூடுதல் நியமனம் உதவும்.

இரட்டைப் பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

கண்காணிப்பு

ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அதிகாரிகள் ஒதுக்கப்படுவதால், பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு முழுமையான கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு முழுவதும் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *