பி.எட். மாணவர் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்கக் கெடு கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 28– தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மற்றும் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்களை யுமிஸ் (UMIS)  இணையதளத்தில் உடனடியாகப் புதுப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியத் தகவல்கள்:

நடப்பு கல்வியாண்டு மாணவர் களுக்கான அறிவுறுத்தல் 2025-20–26 நடப்பு கல்வியாண்டில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறையில் ஏதேனும் தாமதமோ அல்லது தவறுகளோ ஏற்பட்டால் அதற்குப் பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என எச்சரிக்கப் பட்டுள்ளது.

விடுபட்ட 21,506
மாணவர்களின் தரவுகள்

பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சிகரமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன:

சுமார் 424 கல்வியியல் கல்லூரிகள், கடந்த கல்வியாண்டு களில் படித்து முடித்த 21,506 மாணவர்களின் விவரங்களை இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.

குறிப்பிட்ட மாணவர்கள் தேர்ச்சியுற்றிருந்தாலும் அல்லது தோல்வி அடைந்திருந்தாலும், அவர்களின் முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியக் குறிப்பு: மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தத் தரவுகள் மிக அவசியம் என்பதால், கல்லூரி நிர்வாகங்கள் இதில் துரிதமாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *