கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

28.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5இல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்,

* விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது அதிமுக, எடப்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தி கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசு மாற்றியுள்ள விபி.ஜி.ராம்.ஜி திட்டத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் வெடிக்கும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் எச்சரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சிபிஅய்-யிடம் புகார் அளித்துள்ளார்; வழக்கை விசாரிக்கும் அதிகாரி, குற்றச்சாட்டப்பட்ட செங்காருடன் ‘கூட்டுச் சேர்ந்துள்ளதாக’ குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத் அகமதாபாத் மாலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு அலங்காரங்களை ‘பகவா சேனா’ அமைப்பினர் சேதப்படுத்தினர்; அய்ந்து பேர் கைது.

தி இந்து:

* தமிழ்நாட்டின் வளர்ச்சி நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சாலைப் பேரணியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாததால், ஒன்றிய அமைச்சர்களே மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘1%க்கும் குறைவான கிறிஸ்தவர்கள்’: டெல்லி அருகே உள்ள குருகிராமில் தேவாலயம் கட்டுவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் எதிர்ப்பு; கிறிஸ்துமசுக்கு எதிரான நாசவேலைகளை தொடர்ந்து இந்தச் சம்பவம்

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *