உலக திருக்குறள் இணையக்கல்விக் கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடை பெறுகிறது. ஆய்வரங்கத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழியல் இருக்கைக்குழு அமைப்பாளர் விஜய் ஜானகிராமன் தலைமை தாங்குகிறார். திருஞானசம்பந்தம் தொடங்கி வைக் கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வரவேற்றுப் பேசுகிறார். ஆய்வரங்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங் கிலாந்து, இலங்கை, கனடா, ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.