பெரியார் பெருந்தொண்டரும், தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும் வாகன ஓட்டுநராக சிறப்பாகப் பணி யாற்றியவருமான ‘கடவுள் இல்லை’ மானமிகு துறையூர் முருகேசன் (வயது 92) வயது மூப்புக் காரணமாக இன்று (28.4.2023) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம்.
ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டவர் பெரியார் பெருந்தொண்டர் முருகேசன்.
அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும். கழகத்தினருக்கும் ஆறுதலையும். இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை கி.வீரமணி
28.4.2023 தலைவர், திராவிடர் கழகம்