இந்தியாவில் சிறுவர்கள் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, டிச.27- ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப் பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போல், இந்தியாவிலும் ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரி வித்துள்ளது. உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு: இணைய தளங்களில் ஆபாச காட்சிப் பதிவு படங்கள் தாராளமாக உலாவுகின்றன. இதுபோன்ற ஆபாச படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால், சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் பாழாகும்.

எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இது போன்ற ஆபாச காட்சிப் பதிவுகளை தடுக்கும்விதமான மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலாளர்கள், இன்டர்நெட் சர்வீசஸ் புரோவைடர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த வழக்கை நேற்று (26.12.2025) விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க மென்பொருள் அவசியம். இதுபோன்ற காட்சிப்பதிவுகளை குழந்தைகள் பார்த்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும்.

அதனால், ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை ஒன்றிய அரசும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *