பேங்க் ஆப் இந்தியாவில் 514 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 27- நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா (Bank of India), தற்போது நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் வருமாறு: இந்த புதிய அறிவிப்பின்படி, மொத்தம் 514 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ‘கிரெடிட் ஆபீசர்’ (Credit Officer) பதவிக்கு இந்த ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

கல்வி மற்றும் வயது தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

வயது வரம்பு: (01.11.2025 அன்றைய தேதிப்படி) பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. 25 முதல் 35 வயது வரை 28 முதல் 38 வயது வரை 30 முதல் 40 வயது வரை அரசு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி மற்றும் எஸ்.சி./எஸ்.டி பிரிவினருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்: இணையவழி தேர்வு (Online Test) நேர்காணலுக்கான பட்டியல் தயாரித்தல் (Shortlist)

தேர்வு மய்ங்கள்: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 5-1-2026 அன்றைய தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள https://bankofindia.bank.in/career/recruitment-notice என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *