நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம் பா.ஜ.க.வே குறை கூறுகிறது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 27- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது நீக்கப்பட்ட வாக்காளர்கள், மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பா.ஜ.க. புகார் தெரிவித்துள்ளது.

புகார் மனு

இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில செயலர் கராத்தே ஆர்.தியாகராஜன், சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும். மாநகராட்சி ஆணையரு மான ஜெ.குமரகுருபரனுக்கு அனுப்பிய புகார் மனு விவரம்

எஸ்அய்ஆர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் படிவம். 6 அய் பயன்படுத்தி மீண்டும் புதிய வாக்காளர்களாகச் சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. ஏனெனில் படிவம் 6 அய் புதிய வாக்காளர்கள் மட்டுமே அளிக்க முடியும். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து நீக்கப்பட்டவர்களைச் சேர்ப்பதற்கு படிவம் 6-அய் சட்டப்படி பயன்படுத்த முடியாது, இந்த கருத்தை அரசியல் கட்சி பிர திநிதிகள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் போதே கட்டிக்காட்டினேன்.

அப்போது, இப்பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப் பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்த தெளி வான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, புதிய வாக்காளர்களாக சேருவதற்கான படிவத்தை (படிவம் 6) வாக்குச்சாவடி அலுவலர்கள் விநியோகித்து வருகின்றனர். அந்த படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு படிவம் 6-அய் பூர்த்தி செய்து வழங்கினாலும் அவை நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதோடு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்களின் படிவங்களை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர் தல் அலுவலர்கள் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இப்பிரச் சினை குறித்து தெளிவுபடுத்த வேண் டியது அவசியம்.

ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அரசி யல் சாசன உரிமை என்பதால் தேர்தல் ஆணையம் விரைவில் தெளிவு படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *