மருத்துவத் துறையில் ஒரு மகுடம்

1 Min Read

அரசியல்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் பெருமைக்குரிய டாக்டர் மர்யம் அபீபா அன்சாரி அய்தராபாத்தைச் சேர்ந்தவர்.

தெலங்கானா மாநிலம் மாலேகான் அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உர்து மீடியத்தில் பயின்ற மர்யம் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் முதல் மதிப் பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் குடும்பம் அய்தராபாத்திற்கு இடம் பெயர 2012இல் மேல்நிலைப்பள்ளி தேர் விலும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற வருக்கு உஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

2017இல் அய்ந்து பாடங்களில் தங்கப் பதக்கம் வென்று மருத்துவராகத் தேர்ச்சி பெற்றவருக்கு, உஸ்மானியா கல்லூரி நிர்வாகம் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை மருத்துவம் பயில இலவச அனுமதி வழங்கியது. பின்னர் இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு டிப்ளமோ MRCS சிறப்புத் தகுதி பெற்ற மர்யம் அபீபா மீண்டும் 2020 நீட் நுழைவுத் தேர்வு மூலம் M.Ch  அட்மிஷன் கிடைத்து உஸ்மானியாவிலேயே சேர்ந்து பயின்று நாட்டின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், மிக வயது குறைந்த முதல் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் சிறப்புக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

– குளச்சல் ஆசிம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *