இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் பட்டினிப் போராட்டம்

1 Min Read

தமிழ்நாடு

ராமநாதபுரம், நவ.7 இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடு பட்டனர். ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க சென்ற 10 விசைப் படகுகள் மற்றும் 64 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசம் உள்ள 132 படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப் பட்ட படகுகளுக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தங்கச்சிமடத்தில் நேற்று (6.11.2023) மீனவர்கள் உண் ணாநிலைப் போராட்டத்தில் ஈடு பட்டனர். 

இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *