தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் : முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மரியாதை (சென்னை, 24.12.2025)

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார் நினைவு நாளான இன்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல், தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தந்தை பெரியாரின் 52-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஆர்.கிரிராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், நா.எழிலன், த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். (24.12.2025)

தமிழ்நாடு

தமிழ்நாடு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிர் அணியினர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு

அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து கழகத் தோழர்கள் தந்தை பெரியார் படம் ஏந்தி அமைதி ஊர்வலமாக பெரியார் திடல் வந்தடைந்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *