கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.12.2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்வதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் களைப் பரப்பி வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு,

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜாதிப் பஞ்சாயத்து, அடுத்த மாதம் முதல் பெண்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் போராட்டங்களை தூண்டியுள்ளது.

தி டெலிகிராப்

* தொழிலாளர் சட்டங்கள் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுத் திட்டப் பணியாளர்களை நலத்திட்டப் பலன்களிலிருந்து விலக்குகின்றன. புதிய தொழிலாளர் சட்டங்கள் அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களையும் பாதுகாப்பதாகக் கூறப் பட்ட போதிலும், கவுரவப் பணியாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட லட்சக்கணக்கானோர் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்கு வெளியே உள்ளனர்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *