பாக்கியலட்சுமி அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வள்ளியூர், டிச. 24- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் அவர்களின் இணையர் பாக்கியலட்சுமி அம்மையார் (வயது 70) 21.12.2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் 22.12.2025 அன்று காலை 11 மணியளவில் எவ்வித மூடச்சடங்குகளும் இன்றி பகுத்தறிவு முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைவர்கள் ஆறுதல்

அம்மையாரின் மறைவுச் செய்தியறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகி யோர் அலைபேசி வாயிலாக
ந. குணசீலனைத் தொடர்புகொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

இறுதி மரியாதை மற்றும் இரங்கல் கூட்டம்

செய்தி அறிந்ததும் கழக ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், நெல்லை மாவட்டத் தலைவர் ச. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

நல்லடக்க நிகழ்வின் போது, மாவட்டத் தலைவர் ச. இராசேந் திரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில்: மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன், பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் வெள்ளைப் பாண்டி, செயலாளர் சத்யன், தி.மு.க. பிரமுகர்கள் நைனார், சிவ நம்பி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் எம்.எம். சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், குடும்ப உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மருமகன்கள் சிறீராம், சிங்காரவேலன், ஆகியோர் உரையாற்றிய பின், உணர்ச்சிமிகு வீரவணக்க முழக்கங்களுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பங்கேற்பாளர்கள்

இந்நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் நெல்லை காசி, மாவட் டத் துணைத் தலைவர் மகேஷ், சந்திப்பு நடராஜன், வள்ளியூர் ரமேஷ், வழக்குரைஞர் சவுமியா, மாவட்ட ப.க. தலைவர் சந்திரசேகர், நகரச் செயலாளர் நம்பிராஜன், மோகனசுந்தரம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் திரளாகப் பங்கேற்று இறுதி மரியாதை செலுத் தினார்கள். முழு நிகழ்வுகளையும் வள்ளியூர் நகரச் செயலாளர் நம்பிராஜன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் வெள்ளைப் பாண்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *