சுயமரியாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய சுயமரி யாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025, 20-12-2025 அன்று மாலை 6.30 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு, பகுத்தறிவு கலைத்துறையின் புதுச்சேரி அமைப்பாளர் புதுவைப் பிரபா தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் நெ. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் மாநில துணை செயலாளர் வி. இளவரசி சங்கர் நோக்க உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் முன்னிலை உரையாற்றினார். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மாநிலத் தலைவர் சிவ. வீரமணியும், பகுத்தறிவாளர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் இரா. முத்து கணேசும் வாழ்த்துரை வழங்கினர்.
பகுத்தறிவு மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த குறும்படங்கள் திரையிடப்பட்ட இவ்விழாவில், பகுத்தறிவு தொடர்பான பாடல்கள், நடனம், நாடகம், நகைச்சுவை, தனி நடிப்பு போன்ற கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
பகுத்தறிவு கலைத் துறையின் மாநிலச் செயலாளர் (தமிழ்நாடு), திரைப்பட இயக்குநர் மாரி கருணாநிதி சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு, குறும் படக் கலைஞர்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழையும் நினைவுப் பரிசினையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிறைவாக விழாவில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மு. குப்புசாமி நன்றி யுரை ஆற்றினார். ஜெ.வாசுகி பாலமுருகன் நிகழ்ச்சி யினை நெறியாள்கை செய்தார்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் திரளான பொது மக்களும், கவிஞர்களும், கலைஞர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *