பெரியார் பாலிடெக்னிக்கில் மேலாண்மை பற்றிய என்.எஸ்.எஸ். விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், டிச. 23- பெரியார்  பாலி டெக்னிக்கில்   மாணவர்களுக்கான தெருநாய்கள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.12.2025 அன்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் தெருநாய்களை அகற்றி கட்டுப்படுத்துதலில் ஒரு முன்னெடுப்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (DOTE, Chennai) வழிகாட்டுதலின் படி தெருநாய்கள் மேலாண்மைப் பற்றிய விழிப்பணர்வு முகாம் Students Service மற்றும் NSS  சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வல்லம், கால்நடை மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் டாக்டர் E.தாமோதரசெல்வம், B.V.Sc. & A.H.  தெருநாய்கள் பற்றிய விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.   அவர் உரையாற்றும் போது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள். இரயில் நிலையங்கள், பேரூந்து நிறுத்தங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகிய பொது இடங்களில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி (Animal Birth Control(ABC)) போடப்பட்ட பிறகு காப்பகங்களில் பராமரித்தல், அந்த விலங்குகளை துன்புறுத்தலுக்கு உட்படுத்தக் கூடாது என்றும், கழிவு உணவுகளை தெருநாய்களுக்கு அளிப் பதில் உள்ள மேலாண்மை, தெருநாய்கள் கடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கைகள், தெருநாய்கள் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ முறைகள், Rabies நோய் தொற்று, வீட்டு நாய்களை வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார மற்றும் ஆரோக்கிய முறைகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைத்தார். மற்றும்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை யும் அளித்தார்.

இந்நிகழ்வில் முன்னதாக இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி வரவேற்புரையாற்றினார். மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா  கால்நடை மருத்துவர் டாக்டர் இ.தாமோதரசெல்வம்அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றினார். மேலும் முதன்மையர் ஜீ.இராஜராமன் நன்றியுரை வழங்கினார்.  இந்நிகழ்வில் Nodal Officer  எஸ்.மைக்கேல்ராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *