புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள், ஜனவரியில் தொடக்கம் புதிய கால அட்டவணை வெளியீடு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 23- தமிழ்நாட்டில் வீசிய டிட்வா புயல் மற்றும் பெய்த கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, அந்தத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் பாதிப்பால் நடைபெறாமல் இருந்த தேர்வுகள் வரும் ஜனவரி 20, 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு கால அட்டவணை

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் அவை மாற்றப்பட்டுள்ள புதிய தேதிகளின் விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது முதலில் திட்டமிடப்பட்ட தேதி (2025), மாற்றப்பட்டுள்ள புதிய தேதி (2026) நவம்பர் 24 – ஜனவரி 20, நவம்பர் 28 – ஜனவரி 21, நவம்பர் 29 – ஜனவரி 22, டிசம்பர் 02 – ஜனவரி 23, டிசம்பர் 03 – ஜனவரி 24.

நேரம்: தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் முன்னரே ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடங்கள்  ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.  இந்த அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.

மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான coe.annauniv.edu என்ற முகவரியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *