திருச்சி தோழர் மருதை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த திருச்சி மாநகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான   சி.மருதை (வயது 83)  அவர்கள் இன்று (23.12.2025) அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அரசுப் பணியில் இருந்தபோதும், இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராய் விளங்கினார். பணி ஓய்வுக்குப் பிறகும், திருச்சி மாநகர திராவிடர் கழகத் தலைவராக சிறப்பாகப் பணியற்றிய கருஞ்சட்டை வீரர்.

இன்று மாலை 3மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திய பிறகு அவரது விருப்பத்தின் பேரில் அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்படுகிறது.

மறைந்த சி.மருதைக்கு சுசிலா என்ற மனைவியும், மகன் அன்பழகன், மருமகள் மோனிஷா தேவி, மகள் சுமதி, மருமகன் ராஜேஷ், பேரப்பிள்ளைகள் இனியன், கவியாழினி,  எழில்வேந்தன், மகிழினி ஆகியோர் உள்ளனர்.

தோழர் மருதையின் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

23.12.2025         

குறிப்பு: சி. மருதையின் மகன் ம. அன்பழகனிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருதையின் மறைவிற்கு  இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *