100 நாள் வேலைத் திட்டத்தில் பெயர் நீக்கம் காந்தியாரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளனர்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ப.சிதம்பரம் பரபரப்புக் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 22- ஒன்றிய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 2ஆவது முறையாக அவரை கொன்றுள்ளனர் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜோடிக்கப்பட்ட வழக்கு

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது சோனியா, ராகுல் மற்றும் சிலர் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த வழக்கில் காவல் துறையும், புலனாய்வுத் துறையும் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. எஃப்அய்ஆரே இல்லாத ஒரு வழக்கில் அமலாக்கத் துறை ஒரு குற்றத்தை பதிவு செய்தது சட்ட விரோதமாகும்.

முதல் குற்றத்தை பதிவு செய்யாமல், 2ஆவது குற்றத்தை பதிவு செய்யவே முடியாது. அமலாக்கத் துறை இதில் சட்ட விரோதமான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறி வழக்கையே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. இந்த தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கு புத்தி இல்லை என்று பொருள்.

காந்தியாரை இரண்டாவது முறை
கொலை செய்துள்ளனர்

100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து, காந்தியாரின் பெயரை நீக்கி, 2ஆவது முறையாக அவரை கொன்றுள்ளனர். காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு முழுமையாக வழங்கியது. திட்டத்தில் குறை இருந்தால் நிவர்த்தி செய்யலாம் ஆனால் திட்டத்தையே ரத்து செய்து, வாயில் நுழையாத பெயரை வைப்பதைதான் கடுமையாக எதிர்க்கிறோம். புதியதிட்டத்தை காங்கிரஸ் உறுதியாக எதிர்க்கும். கிராமம் கிராமமாகஇந்த மோசடியை அம்பலப்படுத்துவோம். இந்த சட்டம் ரத்தாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *