கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

24.12.2025 புதன்கிழமை
குமரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) பொருள்:  தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் *முன்னிலை:  மு.இராஜசேகர். மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ஞா.பிரான்சிஸ் (மெரியார் பெருந்தொண்டர்) *வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: ம.தயாளன் (கழகக் காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: டாக்டர் எப்.கலைச்செல்வன் (ஒன்றிய செயலாளர்) *கழக அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருக வருக  *அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள்  நிகழ்ச்சி

கன்னியாகுமரி: காலை 9.30மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: கோ.வெற்றி  வேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) *கன்னியாகுமரி  மாவட்ட கழகத் தோழர்களுக்கு  ஓர் அறிவிப்பு: வருகிற (24.12.2025 புதன் கிழமை) தந்தை பெரியார்  அவர்களுடைய  நினைவுநாள். அன்று  காலை 9.30 மணியளவில்  நாகர்கோவில் ஒழுகினசேரியில்  உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்குத் கழக சார்பில்   மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து வீரவணக்கம் செலுத்துதல், உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தோழர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். * விழைவு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்

செய்யாறு மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: மாலை 4.00 *இடம்: படிகலிங்கம் மருந்தகம் மாடியில் * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்புரை: வி.வெங்கட்ராமன். மாவட்ட தலைவர் ப.க. * முன்னிலை: பொன்.சுந்தர் (மாவட்ட கழகச் செயலாளர்), தி.காமராஜ் (நகரத் தலைவர்) * நன்றியுரை: தங்கம்.பெருமாள் *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகர் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: 18.12.2025 தலைமை செயற்குழு சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செயல்படுத்துதல் *வருகை யும் விழைவும்: சேத்துப்பட்டு அ.நாகராசன்.

27.12.2025 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் – கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி: பிற்பகல் 3 மணி *இடம்: பெரியார் மன்றம், கிருஷ்ணகிரி *வரவேற்புரை: ச.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர், ப.க.) *தலைமை: அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர்) *முன்னிலை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும் – தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், கழக மகளிரணி)  *நன்றியுரை: க.வெங்கடேசன் (மாவட்ட செயலாகர், ப.க.).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *