ஜூன் ஒன்றில் பள்ளிகள் திறப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 29- தமிழ்நாட் டில் கோடை விடுமுறைக் குப் பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 2023 – 2024ஆம் ஆண்டுக் கான பள்ளிக்கல்வித் துறை யின் நாள்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (ஏப்.28) சென்னையில் வெளியிட் டார். 

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில்,” கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும். 

2024 ஆம் ஆண்டுக் கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும் தொடங் கும். தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் மாண வர்கள் தன்னம்பிக்கையு டன் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் முக்கியம் தான். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான தனித் திறமையை வளர்த் துக்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் குறை வாகிவிட்டால் திறமை இல்லாத மாணவர்கள் என நீங்கள் கருதிவிடக் கூடாது. உங்கள் திறமைக் கான நாற்காலி உங்க ளுக்காக காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளிக்குச் செல் லும் மாணவர்கள் எண் ணிக்கை குறைந்துள்ளதா கவும், தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் கூறப் பட்டுள்ளது, இது ஜன நாயக நாடு, மாணவர்கள் எந்தப் பள்ளியில் வேண் டுமானாலும் சேரலாம். அரசுப்பள்ளிக்கு முதல மைச்சர் அளித்திருக்கக் கூடிய சலுகையைப் பார்த்து எங்களைத் தேடி மாணவர்கள் வரவேண் டும் என்ற உத்வேகத்தை பெறக்கூடிய அளவிற்கு தான் இந்த சிஏஜி அறிக் கையை நான் அணுகுகி றேன். கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்ட பின்னடைவு களை சரிசெய்யும் நோக் கில் எங்கள் செயல்பாடு கள் இருக்கும்.” என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *