சென்னை, டிச. 22– வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள்– – ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட் டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தி.மு.க. மாவட்டச்
செயலாளர் கூட்டம்
தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (21.12.2025) காணொலி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது வருமாறு:–
வாக்குச்சாவடிவாரியாக மைக்ரோ லெவலில் கவனித்துக் கொண்டிருக் கிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.

எஸ்.அய்.ஆர். நடைமுறையை திறம்பட எதிர்கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் தி.மு. கழகத்தின் போர்ப் படைத் தளபதிகளான எல்லாருக்கும் பாராட்டுகள்!
தமிழ்நாட்டின் 15 சதவிகித வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள் ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.
எஸ்.அய்.ஆர். பணிகளை அவசர கதியில ஆரம்பித்த போதே “இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்; தகுதியான தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது” என முன்கூட்டியே எச்சரித்தோம்! உச்சநீதிமன்றத்திலேயும் வழக்குத் தொடுத்திருக்கிறோம்.
மாநில – மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தொகுதிப் பார்வையாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் –BLA – BDA – BLC – சார்பு அணியினர் என, ஒவ்வொரு உடன்பிறப்பும், பம்பரமாக உழைத்தீர்கள்!
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் களத் துக்கே வரவில்லை. துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாகப் பார்க்க வேண்டும்.
168 தொகுதிகளில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாகப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள் ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர் களில், 4 பேர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாகச் சேர்ந்தவர்கள்.
அதில் ஒருவர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல, மற்ற 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரிபார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும் –ஒரே வாக்குச்சாவடியில், ‘ஓரணியில் தமிழ்நாட்டில்’ இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்!
ஒரே ஒருத்தர் கூட தவறுதலாக விடுபட்டு விடக்கூடாது!
அடுத்து நம்முடைய பணி –இவர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா, டபுள் எண்ட்ரியா எனச் சரிபார்க்க வேண்டும். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந் தால்கூட ஃபார்ம்–6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.
நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொள்ள வேண்டும். கவனமாகப் பார்த்து சரி செய்ய வேண்டியது – ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் – தொகுதிப் பார்வையாளர்களின் பொறுப்பு ஆகும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும் அதில் யாரெல்லாம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர்கள் என்ற விவரமும் நாளைக்குள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். விவரங்களை முழுமையாகச் சரிபார்த்து விடுபடல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
BLA2–களும், BLC–களும் படிவங் களைசரியாகப் பயன்படுத்தி, சேர்த்தல் – நீக்குதல் செய்வதை மேற்பார்வையிட வேண்டும்.
வெற்றி கூட்டணி
நான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பது போலவே நீங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுக்க இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 68 ஆயிரத்து 467–இல் இருந்து, 75 ஆயிரத்து 32 ஆகியிருக்கிறது.
பூத் எண் மட்டும் மாறியிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு, ஏற்ெகனவே நியமிக்கப்பட்டிருக்கும் BLA–2க்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய BLA–2 மற்றும் BLC பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்!
நம்மை நேர்மையாக– நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும் –எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது!
நம் கவனத்தைத் திசைதிருப்பவும் – நம்முடைய உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள்!
முழு பலத்தையும் கொடுத்து
ஓட வேண்டும்!
வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ–அசதியோ கூடாது. இனிமேல் தான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும்.
களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழை யுங்கள்! உழையுங்கள்!
டில்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடே வெல்லும்!
இவ்வாறு தி.மு. கழகத் தலைவர் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் – நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. முதன்மைச் செயலாளர் – நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் – துணை முதலமைச் சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு. கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
