ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 537 சாலைப் பணிகள் நிறைவு சென்னை மாநகராட்சி தகவல்

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.29- ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைப் பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. 

சென்னையில் பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்ட மைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 மற்றும் மாநகராட்சி மூலதன நிதி மற்றும் வெளி ஆதா ரத் திட்டங்கள் மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.150.91 கோடி மதிப் பீட்டில் 1,658 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

இதில் ரூ.47.42 கோடி மதிப்பீட்டில் 521 உட் புறச் சாலைகள் அமைக் கும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. ரூ.31.13 கோடி மதிப்பீட்டில் 342 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.72.36 கோடி மதிப்பீட்டில் 795 உட்புறச் சாலைகள் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. மேலும், ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் 58 பேருந்து தட சாலைகள் அமைக் கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதில், ரூ.8.52 கோடி மதிப்பீட் டில் 16 சாலைகள் அமைக் கும் பணி முடிவடைந்துள் ளது. ரூ.12.79 கோடி மதிப் பீட்டில் 12 சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

ரூ.28.01 கோடி மதிப் பீட்டில் 30 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப் பட உள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *