உடல் உறுப்புக் கொடை அளித்தால் நாற்பது நாள் சிறப்பு விடுப்பு

1 Min Read

ஒன்றிய அரசு அறிவிப்பு

அரசியல்

புதுடில்லி, ஏப். 29- உறுப்பு கொடை செய்யும் ஊழி யர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒன்றியப் பணி யாளர் மற்றும் பயிற்சி துறை பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது: 

உறுப்பு கொடை மிகப் பெரிய அறுவை சிகிச்சை. இதில் இருந்து குணமடைய அதிக காலம் ஓய்வு தேவைப்படு கிறது. உறுப்புக் கொடை செய்வது மிகவும் உன்ன தமான செயல். இதை ஒன்றிய அரசு ஊழியர்க ளிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த சிறப்பு விடுப்பு தற்போது 30 நாட்களாக உள்ளது. அரசு மருத்துவ ரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு கொடை செய்யும் ஒன்றிய அரசு ஊழிய ருக்கு இனி அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்ற வகையில் இருக்க வேண் டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது.

உறுப்பு கொடைக் கான சிகிச்சையை, அங் கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனி யார் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். 

இவ்வாறு ஒன்றியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *