ஆருத்ரா உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மோசடி பிஜேபி பிரமுகர்கள் தொடர்பு பற்றியும் விசாரணை

2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 29- ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட 8 நிதிநிறுவ னங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சம் முதலீட்டாளர்களிடமி ருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது தெரியவந் துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு காவல்துறையின் பொருளா தார குற்றப்பிரிவு காவல்துறைத் தலைவர் ஆசியம்மாள் சென்னை அசோக் நகரில் நேற்று (28.4.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆருத்ரா, ஹிஜாவு, அய்எஃப் எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிட மிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் கைது செய்துள் ளோம். வெளிநாடு தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க பன் னாட்டு காவல் துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. குறிப் பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அந்நிறுவனத்தின் மேலாளர் ராஜசேகர், அவரது மனைவியும் இயக்குநருமான உஷா ராஜசேகர் இருவரும் வெளிநாடு தப்பி விட்ட னர். அவர்களைப் பிடிக்க பன் னாட்டு காவல் துறையினரின் உத வியை நாடி உள்ளோம். இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ.6.35 கோடியும், தங்கம், வெள்ளி என ரூ.1.13 கோடி மதிப்புள்ள நகை கள், 22 கார்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. இந்நிறுவனம், அதன் இயக்குநர்கள், முக்கிய ஏஜென்ட் களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களு டைய 103 அசையா சொத்துகள் பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஹிஜாவு நிறுவனம் 4,400 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். 162 பேரின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கி வைக்கப்பட் டுள்ளது.

ரூ.75.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளையும், ரூ.90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான அனைத்து நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக் கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

பாஜக பிரமுகர்கள் தொடர்பு: ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர்களின் தொடர்பு பற்றி விசாரணை நடக் கிறது. இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றவாளி இல்லை. அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால்அவரை நேரில் ஆஜராக சம் மன் அனுப்பப்பட் டுள்ளது.

அவர் துபாயில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிதி நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் அம லாக்கத் துறையிடம் ஒப்ப டைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *