ரெய்டுகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.29- ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண் மையில் இந்த நிறுவனம் மீது பல் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுக தலைமை முக்கியப் பிரமுகர் களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதய நிதி ஸ்டாலின், ‘வருமான வரித் துறை சோதனை நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடி யாது. தி.மு.க. மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளை தகர்த்தெ றிந்துவிட்டு பணியாற்றி வருகி றோம்.

 அய்.டி. ரெய்டுகளுக்கெல்லாம் அஞ்ச முடியாது. சிலர் தி.மு.க.வை வாழ்த்துவது இல்லை, குற்றச் சாட்டு மட்டுமே கூறி வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *