சென்னை, டிச. 20- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், புவியியல், வரலாறு, உளவியல், அரசியல் அறிவியல், சிறப்பு கல்வியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவிப் பேராசிரியர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு உரிய கல்வித் தகுதியும், பணி அனுபவமும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள் இணையதளம்: விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஊதியம்: மாதம் ரூ. 25,000/- (தொகுப்பூதியம்) நேர்முகத் தேர்வு: ஜனவரி 5ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும். இடம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, சென்னை.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
