திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு

திருச்சி, டிச.19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் 93ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார்மணியம்மை மருத்துவமனையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை,  கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் டிச.14 அன்று நடைபெற்றது.

இம்மருத்துவ முகாம் பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன், திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் சி.தியாக ஆர்த்தி  ஆகி யோர் முன்னிலையில்  நடைபெற்றது.

இம்முகாமில் 146 புறநோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். அவர்களில் 17 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹார்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனைக்கு 10க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து  கொண்டனர்.

இந்த முகாமில் பொது மருத்துவமும் நடைபெற்றது. மருத்துவ முகாமில் மருத்துவர்கள் சித்ரா, சவுமியா, துர்கா தேவி ஆகியோர் நோயாளி களுக்கு சிகிச்சை அளித் தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ்,  பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை,  திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்  மற்றும் செவிலியர்கள், துவாக்குடிமலை லயன்ஸ் சங்க நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *