பூவிருந்தவல்லியில் பணிமனை திறப்பு 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, டிச. 20– பூவிருந்தவல்லியில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பணிமனையை நேற்று (19.12.2025) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, 125 மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மின்சாரப் பேருந்து

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம் கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பணிமனை, உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், ரூ.43.53 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டுள்ளது.

உரிய கட்டட உட்கட்டமைப்பு, பேருந்துகளுக்கு மின்னேற்றம் செய்வதற்கு 25 சார்ஜிங் பாயின்ட் அமைப்பு, புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மாற்றப்பட்ட மின்சார பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்கம் தொடக்க விழா நேற்று (19.12.2025) காலை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதிய பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு, துணை முதலமைச்சர், மின்சார பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

இந்நிகழ்வுகளில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *