‘சாமியாருக்கு கார்ட் ஆப் ஹானரா?’ மரபுகளை மீறும் உத்தரப் பிரதேச காவல்துறை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உத்தராகண்டைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் பார்ப்பனர் புண்டரிக் கோஸ்வாமிக்கு உத்தரப் பிரதேச அரசு அளித்த கார்ட் ஆப் ஹானர் எனப்படும் காவல்துறை சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அவர் எதற்கு வந்தார் ஆன்மிக சொற்பொழிவாற்ற வந்தார்.

பொதுவாக வெளிநாட்டு முக்கிய தலைவர்கள்  குறிப்பாக அதிபர், ராணுவ ஜெனரல், குடியரசுதலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் வரிசையில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய மரியாதையான ‘கார்டு ஆஃப் ஹானர்’, ஒரு சாமியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார்? “பிரிவினைவாத ஹிந்துத்துவ திரைப்படங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்”.

கட்டுரை, ஞாயிறு மலர்

அவர் நடந்து செல்ல சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. சீருடை அணிந்த காவல் துறையினர் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

காவல்துறை உயரதிகாரிகள் அவருக்கு முறையாக சல்யூட் அடித்து வரவேற்றனர்.

ஒரு ஆன்மிக சொற்பொழிவாளருக்கு எந்த அடிப்படையில் இத்தகைய அரசு மரியாதை வழங்கப்பட்டது  காவல்துறை விதிகளுக்கு மாறாக இது போன்ற செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது?

சமாஜ்வாடி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *