மே நாள்: விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

0 Min Read

கோவை, மே 2- மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பொது விடுமுறை விடப்பட்டது.

கோவை மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களில் விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க, கோவை தொழிலாளர் துறை அதி காரிகள் கோவை, பொள்ளாச்சி, வால் பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டனர்.கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்பட, 101 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தொழிலாளர் நலத்துறை விதிகளை பின்பற்றாமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டுபிடிக்கப் பட்டது. 

இது தொடர்பாக, அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *