அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணிக்கு 67 காலி இடங்கள் ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 16- தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மாநில மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் ரேடியோகிராபர் (கதிர்வீச்சு நிபுணர்) பணியில் 67 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:  ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜியில் 2 ஆண்டுகால டிப்ளமோ படித்தவர்கள். ரேடியோகிராபி & இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜி, ரேடியாலஜி & இமேஜிங் டெக்னாலஜி ஆகியவற்றில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு: 32 வயது.

எஸ்.சி., எஸ்.சி – அருந்ததியர், எஸ்.டி., பி.சி., பி.சி – முஸ்லிம், எம்.பி.சி., டி.என்.சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப் படுவார்கள். மொத்தமுள்ள 100% வெயிட்டேஜ் மதிப்பெண் கீழ்வருமாறு அளிக்கப்படும்:    எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு: 20%    பிளஸ் 2 தேர்வுக்கு: 30%    நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு: 50%இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

உள் ஒதுக்கீடு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலி இடங்களில் 20% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய கல்வித் தகுதி உடையவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.mrb.tn.gov.in) வாயிலாக ஜனவரி 4-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், சமூக இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியான காலி இடங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் மேற்கண்ட இணையதளம் மூலம் விரிவாக அறிந்துகொள்ளலாம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *