நியாயவிலைக் கடைகளில் விரைவில் கேழ்வரகு விற்பனை உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

Viduthalai
2 Min Read

அரசியல்

திண்டுக்கல், மே2 தமிழ் நாடு உணவுத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் நேற்று கொடைக்கானலுக்கு வந்தார். அப் போது கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஆய்வு செய் தார். அதே போல் சமீபத்தில் புதிதாக திறக் கப்பட்ட கிட்டங்கியையும்  அவர் பார்வையிட்டார். பின்னர் அங் கிருந்த தொழிலாளர் களுக்கு அவர் மே தின வாழ்த்துகளை கூறினார். இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் ராஜா, முத்துராமன், சரவணகுமார் உடனிருந்தனர்.

பின்னர் டாக்டர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர் ளுக்கு அளித்த பேட்டியில்,  தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டை கள் உள்ளன. இந்த ஆண்டு 35.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். இதற்காக 4.41 லட்சம் விவசாயி களுக்கு ரூ.7 ஆயிரத்து 882 கோடி பணபட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 140 கோடி நிலுவைத்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 13 ஆயிரத்து 442 கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 வகையான கடன்கள் 82 லட்சத்து 15 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, உலக நாடுகள் சார்பில் சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதை யொட்டி கூட்டுறவு சங்கங் கள் மூலம் நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு விற்பனை விரைவில் மேற்கொள்ளப்படும். அத்துடன் கம்பு, சோளம் ஆகியவை அதிக அளவு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப் பட்டு, அவையும் கொள் முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்நாட்டை சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற நட வடிக்கைஎடுக்கப் பட்டுள்ளது.

மேலும் ரூ.1,500 கோடி கால்நடை கடனாக வழங்கப் பட உள்ளது. முதியோர் களுக்காக பல்வேறு கடன் சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளது. 5 ஆயிரத்து 584 நியாயவிலைக் கடை கள் புதுப்பிக்கப்பட்டு, அய்.எஸ்.ஓ. தர சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 5 ஆயிரம் கடை கள் புதுப்பிக்கப்படும். வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில், 2 ஆயிரம் கடைகளுக்கு இந்த ஆண்டு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். அத்துடன் நியாய விலைக்கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும். கிட்டங்கிகளில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவின்படி 30 சதவீத சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *