11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை முகாம்

1 Min Read

 அரியலூர், மே 2 அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11, 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2- ஆம் கட்டமாக ஜெயங் கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய வட்டாரங் களுக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை முகாம் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஜெயங் கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி வளா கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவி களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *