வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு மெரினாவில் இரவு நேர காப்பகம் இம்மாத இறுதியில் திறக்கப்படுகிறது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.15- சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்துத் தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இரவு நேர காப்பகம்

இதேபோல, சாலையில் பிச்சை எடுப்பவர்கள், வயதானவர்கள், வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மெரினா கடற்கரை மணற் பரப்பிலும், உட்புற சாலையின் ஒதுக்குப் புறங்களிலும் தூங்குவார்கள். இதனால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையிலேயே வீடு இல்லாதவர்களுக்கு இரவு நேர காப்பகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் அருகில் உள்ள காலியிடத்தில் 2 ஆயிரத்து 400 சதுர அடியில் புதிதாக இரவு நேர காப்பகத்தை மாநகராட்சி கட்டியுள்ளது.

ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த காப்பகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காப்பக பராமரிப்புப் பணியை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, காப்பகத்தில் தங்கும் நபர்களுக்கு இரவு நேர உணவை அம்மா உணவகம் மூலம் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு இந்த காப்பகம் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *