தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 15- தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் 13.12.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் (www.tncoopsrb.in) வரவேற்கப்படுகின்றன.

இதற்கு நேற்று (டிச.14) முதல் 31ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். உதவியாளர் பணிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம், இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்: குறைந்தபட்சக் கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி: கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமா அல்லது மேல்நிலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். (தற்போது கூட்டுறவு படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.)

பொதுப் பிரிவினர்: 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி): வயது வரம்புக் கட்டுப்பாடு கிடையாது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீடு மொத்த காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி வரை அனைத்துக் கல்வித் தகுதியையும் தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *