சூடானில் சூடு தணியவில்லை: மேலும் 754 இந்தியர்கள் மீட்பு

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மே 2- வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

இதையடுத்து, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க, ‘ஆப்பரேஷன் காவிரி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் (30.4.2023) வரை, 606 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மேலும் 754 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில், 392 பேர் அடங்கிய குழு, ராணுவ விமானம் வாயிலாக புதுடில்லி வந்தடைந்தது.

மற்றொரு விமானம், 362 பேருடன் பெங்களூரு வந்தது. இதுவரை மொத்தம், 1,360 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். ‘அனைத்து இந்தியர்களும் மீட்கப்படும் வரை, ஆப்பரேஷன் காவிரி தொடரும்‘ என, ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *