மூடநம்பிக்கையால் ஏற்பட்ட இழப்பு! பில்லி சூனியத்துக்குப் பரிகார பூஜை செய்வதாக நடித்து பெண்ணிடம் நகை, பணம் திருடியவர் கைது!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.15 பில்லி சூனியத்துக்குப் பரிகார  பூஜை செய்வதாக நடித்து பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற குடுகுடுப்​பைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, திருவான்​மியூர், மேட்டுத் தெரு​வைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 40). இவரது கணவர் தனியார் பள்ளி ஒன்​றில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆம் தேதி அவர் வழக்கம் போல் பணிக்குச் சென்​றுவிட்டார். மஞ்சு மட்டும் வீட்டில் இருந்தார். அப்​போது கையில் குடுகுடுப்​பை​யுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். வெளியே வந்த மஞ்சுவைப் பார்த்து ‘உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் பில்லி சூனியம் வைத்துள்ளனர். இதனால் கெடுதல் நடக்க உள்ளது. இது ஜக்கம்மா வாக்கு’ என குடுகுடுப்​பையை அடித்துத் தொடர்ந்து சொல்லிக்​கொண்டே இருந்தார்.

இதனால், பயந்து​போன மஞ்சு, ‘இதைப் போக்க வழி ஏதும் உள்ளதா?’ என பதற்​றத்துடன் கேட்டார். அதற்கு ‘பரிகாரப் பூஜை செய்தால் தீங்கு நீங்கும். நன்மை பிறக்கும்’ என அந்த நபர் தெரிவித்தார். பரி கார பூஜையை உடனடியாக செய்யும்படி மஞ்சு கேட்டுக்கொண்டார். இதையடுத்து வீட்டுக்குள் வந்த அந்த நபர் ‘பூஜைப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் பணம், பட்டுப் புட​வை​கள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கழற்றி தாம்பூலத்தில் வைக்குமாறு கூறினார். அதன்​படி மஞ்சு, அவர் அணிந்திருந்த சுமார் 4 பவுன் எடை கொண்ட 2 தங்க வளை​யல்கள் மற்றும் ஒரு ஜோடி தங்கக் கம்​மல், பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றைப் பூஜைக்காக வைத்துள்ளார்.

பின்​னர் அந்த நபர் தண்ணீர் கொண்டு வரு​மாறு கூறவே, மஞ்சு தண்ணீர் எடுத்து வருவதற்குள், குடுகுடுப்பைக்காரர் பூஜையில் வைத்திருந்த பணம், தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். அதிர்ச்சி அடைந்த மஞ்சு, இது தொடர்பாக திருவான்​மியூர் காவல் நிலை​யத்தில் புகார் தெரிவித்தார். அதன்​படி, காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில் குடுகுடுப்​பைக்காரர் வேடமிட்டு நூதன திருட்டில் ஈடுபட்டது கொட்டிவாக்கத்​தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 50) என்​பது தெரியவந்தது.  உடனடியாகக் காவல்துறையினர்  அவரைக் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *