ஒரே நாளில் நான்கு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி சாதனை

1 Min Read

அரசியல்

சென்னை, மே 2- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குருப்-1 முதல்நிலைத் தேர்வு, டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை செய்தியாளர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடை பெற்ற சுகாதார அலுவலர் தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும், கடந்த 28.4.2023 அன்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

அடுத்தகட்டத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டி யலை, தேர்வாணையத்தின் இணையதளத்தில்(www.tnpsc.gov.in)தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வெளியிட வேண் டும். 

குறிப்பாக, கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டுமென தேர்வர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *