6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.14  சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (13.12.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் இதுவரை 683 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 286 பேர் பயனடைந்து உள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் 32 ஆயிரத்து 514 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க எச்.பி.வி. வைரஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் 3 லட்சத்து 38 ஆயிரம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

இதேபோல, புதிதாக உருவான பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தி வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர்கள் அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், அக்கல்லூரிகளின் கட்டிடப் பணிகளை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் செயல்படுத்தியது” என்று அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *